Posts

தம்பியின் பல்

Image
   தம்பியின் பல். தம்பி தரம் ஒன்றில் படிக்கின்றான்.இன்று பாடசாலையால் வந்தும் யாருடனும் கதைக்காது வீட்டிற்குள் சென்றான்.நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை.  தம்பியைத் தேடினோம்.ஒரு மூலை மறைவில் அழுதுகொண்டிருந்தான்.வீட்டில் எல்லோரும் பயந்துவிட்டோம்.  அம்மாவைக் கண்டதும் பயந்து பெரிதாக அழுதான்.தொலைந்துவிட்டது. பாடசாலை முடியும் நேரம்தான்.தேடித்தேடிப் பார்த்தேன்.காணவில்லை என்றான். ஏதாவது பொருட்களைத் தொலைத்தால் அம்மா பேசுவார் .என்ன தொலைந்துவிட்டது என்று கேட்டோம் . எனது பல் என்றான் .எங்களுக்கு ஒரே சிரிப்பு.அம்மா தம்பியைக் கட்டியணைத்து முத்தமிட்டார்.அம்மா மெதுவாக ஏதோ சொன்னார்.தம்பியும் ஏல்லோருடனும் சேர்ந்து பற்கள் தெரிய சிரித்தான்.

அம்மா

Image
   அம்மா ஆண்டவன் தந்த மூன்றெழுத்து அழகோவியம் அம்மா வரலாற்றில் தடம் பதிக்க வழிகாட்டியவர் அம்மா உதிரத்தை பாலாக்கி உயிர் கொடுத்தவர் அம்மா துன்பங்கள் எத்தனையென்றாலும் துவண்டிடாது எழுந்திடுவார் அம்மா சுமைதாங்கியாய் எல்லாம் சுகமென  மகிழ்விப்பார் அம்மா மகத்தான பல அறிவுரைகளால் மனிதத்துடன் நடக்கிண்றோம் அம்மா......

என் ஊர்மகிமை

Image
   என் ஊர்மகிமை.   நுணசை முருகன் வீற்றிருக்கும் கடம்பமர வேலவனின் மாதகலூரே வந்தாரை வரவேற்கும் மண்ணே கோடை வெய்யில் நேரத்திலும் கொஞ்சம் கூட பஞ்சம் இல்லை உன் இதமான காற்றுக்கு.....

எம் ஆசான்

Image
   எம் ஆசான்.   மாணவச் செல்வங்கள் மாண்புடன் கல்வி கற்றிய அர்ப்பணிப்பு உணர்வுடன் ஆற்றிய சேவைகள் எத்தனை ஆசான் பாதம் பதித்த எம் பள்ளி நிலம் எல்லாம் பச்சைப் பசேல் என மாறிடக் கண்ட நாமும் மாணவர் படையாக்ககி என்றும் எம் மனம் மகிழ எத்தனை வகை நடிபங்கு நீங்கள் எம் பள்ளிக்கு தந்த  நிலையான பெரும் சொத்து பரந்த அறிவான மாணவர்கள் பார்போற்ற வாழ்ந்திடவே என்றும் மறவோம் உங்கள் ஏணியான எற்றமிகு சேவையினை.

என் தோட்டப் பூக்கள்

Image
    என் தோட்டப் பூக்கள் என் விட்டுத் தோட்டத்தில் எல்லாமே கண்ணைக் கவரும் குண்டு குண்டாய் வெள்ளைநிற அடுக்கு நித்தியகலியாணிப் பூக்களும் அடுக்கான நந்தியாவட்டம் பூக்களும் விதவிதமான செவ்வரத்தம் பூக்களும் என்னைப் பார்ததுச் சிரித்திடவே சிறிதளவில் பறித்து வந்து சாமியை அலங்கரித்து வேண்டியதும் அருகில் உள்ள கோவிலுக்கு கொடுக்க விருப்பம் இருந்தாலும் சிறியவள் எனக்கு நேரமில்லை விரைநதிடுவேன் பள்ளி நோக்கி பள்ளி விட்டு வருமபோதும் பாவமாய் பார்த்திருக்கும் எனக்காக .....